Tuesday, October 20, 2009

[Quotes] - சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிகள்

சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிகள்

1. மகத்தான காரியங்களை செய்வதற்காக ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறான். அந்தக் காரியங்களை நாம் செய்து முடிப்போம்.

2. உனது எதிர்காலத்தை நீயே உருவாகுவாய். எல்லையற்ற எதிர்காலம் உன்முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.

3. தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதை போல, உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒருநூறயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்க்குத் தயாராக இருக்கின்றன.

4. வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும் பெரும் மனஉறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். மன உறுதியை நீ பெற்றிரு, கடுமையாக உழை, உனது குறிக்கோளை நீ அடைவாய்.

5. போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே , ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

* தொடரும்...

No comments: